Showing posts with label கோலம். Show all posts
Showing posts with label கோலம். Show all posts

Tuesday, 26 April 2016

இழை கோலம்(அரிசி மா கோலம்)

பொதுவாக பண்டிகை நாட்களிலும், சுப விழாக்களின் பொழுதும் இந்த ஈர மாவால் கோலம் போடுவார்கள்.

மாவு தயார் செய்யும் முறை:

பச்சரிசியை கழுவி நீரில் குறைந்தது 5 மணி நேரம் அல்லது ஓர் இரவு ஊற வைத்துவிட வேண்டும். பின்பு அதை mixie அல்லது grinder ல் மைய அரைத்து தோசை மாவு பதத்திற்கு நீர் விட்டு  கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 பின்பு ஒரு நல்ல வெள்ளை துணியை நீர்ணனைது பிழிந்து விட்டு இந்த மாவில் நனைத்து நடு விரலால் கோலம் இட வேண்டும்.
கொடு இழுக்க சிறிது  சிறிதாக துணியில் உள்ள மாவை பிழிய இழை அழகாக வரும்.

பூஜை செய்யும் இடங்களில் பொதுவாக மாட கோலம் இடுவது வழக்கம். பூஜைகளுக்கு நான்கு இழை கோலமாக போடுவதே சிறப்பு.

கோலம் தரையில் இருந்து பெயராமல் நன்றாக பிடிக்க சிறிது மைதா மாவை கலந்து கோலம் போடுகின்றனர்.
அதோடு இதில் சிறிது வண்ண பொடிகளை கலந்தும் போடுவார். ஆயினும் வெள்ளையாக வெறும் அரிசி மாவில் போடுவதே சிறப்பு.