Tuesday 26 April 2016

இழை கோலம்(அரிசி மா கோலம்)

பொதுவாக பண்டிகை நாட்களிலும், சுப விழாக்களின் பொழுதும் இந்த ஈர மாவால் கோலம் போடுவார்கள்.

மாவு தயார் செய்யும் முறை:

பச்சரிசியை கழுவி நீரில் குறைந்தது 5 மணி நேரம் அல்லது ஓர் இரவு ஊற வைத்துவிட வேண்டும். பின்பு அதை mixie அல்லது grinder ல் மைய அரைத்து தோசை மாவு பதத்திற்கு நீர் விட்டு  கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 பின்பு ஒரு நல்ல வெள்ளை துணியை நீர்ணனைது பிழிந்து விட்டு இந்த மாவில் நனைத்து நடு விரலால் கோலம் இட வேண்டும்.
கொடு இழுக்க சிறிது  சிறிதாக துணியில் உள்ள மாவை பிழிய இழை அழகாக வரும்.

பூஜை செய்யும் இடங்களில் பொதுவாக மாட கோலம் இடுவது வழக்கம். பூஜைகளுக்கு நான்கு இழை கோலமாக போடுவதே சிறப்பு.

கோலம் தரையில் இருந்து பெயராமல் நன்றாக பிடிக்க சிறிது மைதா மாவை கலந்து கோலம் போடுகின்றனர்.
அதோடு இதில் சிறிது வண்ண பொடிகளை கலந்தும் போடுவார். ஆயினும் வெள்ளையாக வெறும் அரிசி மாவில் போடுவதே சிறப்பு.

தமிழ் வருட பிறப்பு

இது புது வருடத்தின் முதல் பண்டிகையாக தமிழர்களால்  கொண்டாடபடுகிறது. தமிழ் மாதங்கள் சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் வரையருக்க பட்ட ஒன்று ஆகும்.

இந்த சித்திரை முதல் தேதியில் கடவுளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வரும் புது வருடம் சிறப்பாக இருக்க அருள் புரியுமாறு  வேண்டிக்கொள்வர்.

முதல் நாளே வீட்டை சுத்தபடுத்தி ஈர மாகோலம் இட வேண்டும். விளக்கு முதலிய பூஜை பொருட்களை சுத்தபடுத்தி தயார் செய்து வைத்து  விட வேண்டும். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து பூஜை கு ஏற்ற நல்ல நேரத்தில் கடவுளுக்கு படைக்க வேண்டும்.
பொதுவாக புத்தாண்டு க்கு அறுசுவையும் கலந்து இருக்கும் விதமாக வடை பாயசம் செய்வதோடு வேப்பம்பூ மாங்காய் பச்சடியும், வடபருப்பும்  செய்து இறைவனுக்கு படைப்பது வழக்கம். வேம்பம்பூ ரசமும் செய்யலாம்.
அதோடு நீர் மோர், பானகம் போன்றவையும் செய்வார்கள். 

புத்தாண்டு அன்று ஒவ்வொரு வீட்டில் அந்த வருடத்தின் புது பஞ்சாங்கத்தையும் வைத்து  படைத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அதை படிப்பார்கள். புத்தாண்டு கு முன்பே பஞ்சாங்கம் வாங்கி இருந்தாலும் அதை படிக்காமல் பிரிக்க கூடாது என்று என் அம்மா சொல்லுவார்கள்.

அன்றைய தினம் மாலை வேளை யில் உள்ளூர் கோவில்களில் ப்ரோகிதர் போன்றோர் பஞ்சாங்கம் படித்து பலன் கூறுவார்கள். பிறக்கும் வருடம் எத்தகைய வருடமாக அமையும் என்றும, எந்தந்த  ராசிக்கு சிறப்பாக அமையும், பரிகாரம் செய்ய வெடிய ராசிகள் போன்ற விஷயங்களையும் மழை வெப்பம் போன்ற பொதுவான விஷயங்களையும் கூறுவார்கள்.

எங்கள் கிராமத்தில் விவசாயமே முக்கிய தொழில் என்பதால் அன்றைய தினம் முழுவதும் அந்த வருடத்திய பலன்களை வைத்து விவசாயம் எப்படி இருக்கும் என்று பெரியவர்கள் பேசிக்கொள்வது இன்றும் என் நினைவில் உள்ளது.



தமிழர் பண்டிகைகள்

நம் தமிழர் வாழ்வில்  பண்டிகைகளுக்கு குறைவே இல்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கொண்டாடும்  முறைகள் உண்டு, ஆனால் இன்று பலருக்கும் அந்த முறைகள் தெரிவதில்லை.

இன்றைய சூழலில் என் அம்மா அறிந்தவற்றுள் பாதி அளவு கூட எனக்கு தெரிவதில்லை, எனவே என் அடுத்த தலைமுறைக்கு என்னில் பாதியாவது கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த பதிவு.

இதில் எனக்கு தெரிந்த, எங்கள் குடும்பங்களில் உள்ள முறைகளையும் அந்தந்த பண்டிகைகளின் சிறப்புகள் போன்றவற்றை முடிந்த அளவு விளக்கமாக கொடுத்துள்ளேன்.

2. சித்ரா பௌர்ணமி