Monday 12 March 2018

காரடையான் நோன்பு (Karadaiyaan Nonbu procedure and details)

காரடையான் நோன்பு தமிழ் நாட்டில் பெண்களால் கடைபிடிக்க படும் ஒரு நோன்பு விழா. இது தங்கள் கணவரின் நலனுக்காகவும், அவர் தங்களை விட்டு ஒரு பொதும் பிரியாதிருக்கவும் திருமண மான பெண்கள் அம்மனை பிரார்த்திக்கும் ஒரு நோன்பு. திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் கிடைக்கவும், இந்த நோன்பை நோற்பது வழக்கம். இது ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான மாசி முடிந்து பங்குனி துவங்கும் நேரத்தில் செய்யப்படும் பூஜை. அன்றைய  நாள் சூரிய உதயத்தில் இருந்து உண்ணா நோன்பு இருந்து , மாசி முடிந்து பங்குனி துவங்கும் நேரத்தில் கார அடை (காரடையான் நோன்பு அடை) செய்து இறைவனுக்கு  படைத்து விரதத்தை முடிக்க வேண்டும்.

நோன்பு அடை செய்முறைக்கு பின் வரும் லிங்க்ஐ  சொடுக்கவும்.
காரடையான் நோன்பு அடை செய்முறை மற்றும்  வீடியோ.

பூஜை நேரம்:
இது முன்பே குறிப்பிட்டது போல மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் பொழுது செய்யப்படும் பூஜை. எனவே ஒவ்வொரு வருடமும் பூஜை நேரம் மாறுபட வாய்ப்புள்ளது.
இந்த வருடம் பங்குனி மாதம் நள்ளிரவு நேரம் பிறக்கிறது. இரவு நேரங்களில் பூஜை செய்வது அத்தனை உகந்தது அல்ல. எனவே இந்த வருடம் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் பூஜையை முடித்து விட வேண்டும்.

March 14 2018 - 7 pm to 8 pm

இந்த நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் அடுத்து பங்குனி மாதத்தில் வரும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் நல்ல நேரத்தில் செய்யலாம்.

நோன்பு பின் உள்ள கதை :
முதலில் இந்த நோன்பின் பின் குறிப்பிடப்படும் கதையை சுருக்கமாக பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில் சாவித்ரி என்ற ராஜ குல பெண் ஒரு வருடமே தன் தன் கணவனின் ஆயுட்காலம் என்று அறிந்தும்  சத்தியவானை விரும்பி மணந்து சந்தோஷமாக வாழ்த்து வந்தாள். அரண்மனை சுக போகங்களுக்கு பழகி இருந்தாலும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று அவனுடன் அன்பாக வாழ்ந்து வந்தாள்.
இவ்வாறு சென்று கொண்டிருந்த வாழ்வில், சத்தியவானின் இறுதி நாளும் வந்தது. எமதர்மன் தன் பாச கயிற்றை வீசி சத்தியவானின் உயிரை பறித்து கொண்டு சென்றார். பத்தினி பெண்ணான சாவித்ரியின் கண்களுக்கு எமன் தெரியவே அவரை விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். சாவித்ரியின் தைரியத்தையும், கணவனின் மேல் கொண்ட அன்பையும் கண்டு மனம் கனிந்த எமராஜா அவள் கண்களுக்கு காட்சி கொடுத்து அவளை இது தான் விதி, முன்பே எழுதப்பட்டது , அதனால் உன் கணவனின் உயிரை திரும்ப பெற முடியாது, எனவே நீ திரும்பி செல் என அறிவுறுத்தினார்.
கற்புக்கரசி சாவித்ரியோ அவரின் கட்டளையை மீறி, திரும்பி போக  மறுத்தாள். அவளின்  பக்தி மற்றும் அன்பையும் கண்டு இதயம் கனிந்த எமன் சாவித்ரியிடம், உன் கணவனின் உயிரை தவிர வேறு ஏதேனும் வரம் கேள் தருகிறேன் என்றார். அன்பும் பண்பும் அறிவு கூர்மையும் ஒருங்கே பெற்ற சாவித்ரி எமனிடம் என் குலம் வாழை அடி வாழையாக தழைக்க வேண்டும், அதற்கு  வரம் தாருங்கள் என்றாள். எமனும் சற்றும் யோசிக்காமல் அவளுக்கு அந்த வரத்தினை தந்தார்.
குழந்தை இல்லாமல் இருந்த சாவித்ரிக்கு, அவள் கேட்ட வரம் நிறை வேற வேண்டுமானால் அவள் கணவன் உயிருடன் வர வேண்டும் என்று சாவித்ரி கூறியதை கேட்ட எமதர்மன் அதிர்ந்து பின் வேறு வழி இல்லாமல் சத்தியவானின் உயிரை அங்கேயே விட்டு சென்றார்.
சத்யவான் பிழைத்து எழுந்ததும் கடவுளுக்கும் யமதர்மனுக்கும் நன்றி சொல்லும் விதமாக உடனே தன் வீட்டில் இருந்த கார் அரிசியையும் வெள்ளமும், பருப்பையும் சேர்த்து அடை போல் செய்து உருகாத வெண்ணையும் வைத்து கடவுளுக்கு படைத்தாள். ஒரு மஞ்சள் கயிரையும் வைத்து பூஜை செய்து கணவன் கைகளால் அணிந்து கொண்டாள்
விதியை தன் மதியால் வென்ற சாவித்ரியியை நினைவு கூர்ந்து , தங்கள் கணவரையும் ஒரு நாளும் பிரியாதிருக்க வேண்டும் என்றும்  நோன்பு நோற்று பிரார்த்திக்கும் பண்டிகையே இந்த காரடையான் நோன்பு.
சாவித்ரி செய்தது போலவே பச்சரிசியை வைத்து  அடை செய்து மஞ்சள் நூல் வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வது வழக்கம்.

நோன்பு நோற்கும் முறை:

மாசி முடிந்து பங்குனி துவங்கும் நாளில் (இந்த வருடம் மார்ச் 14 ) அன்று அதிகாலையில் எழுந்து தலை குளித்து வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் (பங்குனி பிறக்கும் நேரம் வரை) உபவாசம் இருக்க வேண்டும்.
வீட்டின் முன்பும் பூஜை அறையிலும் மாக்கோலம் இட வேண்டும்.
பின்பு அரிசியை ஊற வைத்து மாவு தயார் செய்து காராமணி பருப்பு சேர்த்து அடை (கொழுக்கட்டை) செய்து வைக்க வேண்டும்.
முன்பே தயார் செய்து வைத்த அல்லது கடைகளில் வாங்கிய அரிசி மாவிலும் செய்வதுண்டு. ஆனால் புதிதாக செய்த அரிசி  மாவில் செய்வதே சிறப்பு.

பூஜை கு உரிய நேரத்தில் பூஜை அறையில் ஒரு நுனி வாழை இலையை போட்டு அதில் நுனி பகுதியில் உடைத்த தேங்காய், வெற்றிலை பாக்கு பழம் வைக்கவும். அதோடு வீட்டில் உள்ள பெண்களில் எண்ணிக்கையோடு ஒன்று கூடுதலாக( அம்மனுக்காக ) சேர்த்து மஞ்சள் நூல்களை தயார் செய்து நடுவில் ஒரு பூவை கோர்த்து வெற்றிலை மேல் வைக்கவும்.

மஞ்சள் பொடியை நீரில் கரைத்து நூல்களின் மேல் தடவினால் மஞ்சள் கயிறு தயார். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூஜையின் பின் இந்த கயிறை அணிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனவர்கள் கழுத்திலும், கன்னி பெண்கள் கைகளிலும் இந்த கயிறை அணிந்து கொள்ள வேண்டும்.

அதே இலையில் நடுவில் செய்து வைத்த கார் அடை மற்றும் உருகாத வெண்ணையும் வைக்க வேண்டும்.

பின்பு சூடம் , சாம்பிராணி தூபம் காட்டி நீர் விட்டு நெய்வேத்தியம் செய்து
பின்வரும் ஸ்லோகங்களை சொல்லி நமஸ்கரிக்கவும்.

உருகாகத வெண்ணையும் ஓரடையும் நோற்று உனக்கு நான் வைத்தேன் , ஒருநாளும் என் கணவர் என்னை  பிரியாதிருக்க அருள் புரிவாய் தாயே !!!!

பின்பு  ஒரு கயிறை அம்மன் படத்திற்க்கு மாட்டி விட்டு , மற்றவற்றை  அணைத்து பெண்களும்  அணிய வேண்டும். வயதான சுமங்கலி பெண்கள் இருந்தால் அவர்கள் கைகளால் அணிவித்து கொள்வது சிறப்பு.

மஞ்சள் கயிறை அணிவித்து கொள்ளும் பொழுது பின் வரும் மந்திரத்தை  சொல்லியும்  அணிந்து கொள்ளலாம்.

தோ³ரம்ʼ க்³ருʼஹ்ணாமி ஸுப⁴கே³ ஸஹாரித்³ரம் த⁴ராம்யஹம் | 
ப⁴ர்து²: ஆயுஸ்² ஸித்³த்⁴யர்த²ம்ʼ ஸுப்ரீதா ப⁴வ ஸர்வதா³ ||

(5  நாட்கள் கழித்து இந்த கயிறை எடுத்து நீர் நிலைகளிலோ, செடியின் வேரிலோ போட்டு விடலாம். தாலி சரடிலும் சுற்றி  கொள்ளலாம்.)

மாக்கோலம் இடும் முறை அறிய பின் வரும் லிங்க் ஐ சொடுக்கவும்.


இது நான் வழிபடும் முறை ஆகும். சிலர் கும்பம் வைத்தும் , அதை அம்பாளாக பாவித்து வழிப்படுத்தும் உண்டு.

இதில் ஏதேனும் விடு பட்டிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

நன்றி!!

Wednesday 19 October 2016

புளி சொஜ்ஜி/ புளி சுண்டல் (PULI SOJJI/PULI SUNDAL)


இது காலை அல்லது இரவு உணவாக செய்யும் ஒரு மிக எளிய பதார்த்தம்.

தேவையான பொருட்கள்:
அரிசி                                          1 கப்
தண்ணீர்                                   2 கப்
புளி                                              சிறிய எலுமிச்சை அளவு
சிவப்பு மிளகாய்                    5
பெருங்காயத்தூள்                1 டீஸ்பூன்
உப்பு                                            தேவையான அளவு
எண்ணெய்                               3 டேபிள் ஸ்பூன்
கடுகு                                            1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு                         3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு                     2 டேபிள் ஸ்பூன்\
கறிவேப்பிலை                         1 கொத்து
மஞ்சள் பொடி                          1 டீஸ்பூன்


செய்முறை:
1.முதலில் அரிசியை எண்ணெய் விடாமல் நன்கு சிவக்க  வறுத்துக் கொள்ளவும்.

2. புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் (அல்லது) pressure cooker ல்எண்ணெய் விட்டு
கடுகு சேர்த்து வெடித்ததும் மிளகாயை கிள்ளி போட்டு  வறுபட்டதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காய பொடி சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் கறிவேப்பிலை சேர்த்து புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்




4. கொதிக்கும் நீரில் உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும்.

5. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.


6. பாத்திரத்தை மூடி நன்கு வேக விட்டு இறக்கவும்.


குறிப்பு:
இதனுடன்  அப்பளம் அல்லது கூழ் வடகம் சேர்த்து  சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
காரம் அதிகம் தேவைபடுபவர்கள் மிளகாய் அதிகம் சேர்க்கலாம்.



Tuesday 18 October 2016

Egg-less chocolate cake with butter cream frosting


This is a perfect eggless chocolate cake which is super moist , crumble,soft and less Sweet.
I have tried this cake many times and it came out very good and perfect always. Recently i made this cake for my hubby's friend Birthday. I have used American Butter cream for frosting.
I am sure this is foolproof recipe that anyone can try with the exact measure.
Ok.,Now lets move on to the recipe :)

Ingredients:

  • All purpose Flour                  1 cup
  • Granulated Sugar                   3/4 cup
  • Baking Soda                           1/2 tsp
  • Baking Powder                       1/2 tsp
  • Oil                                           1/2 cup
  • Hot Coffee                              1/4 cup*
  • Milk                                        1/4 cup
  • Yogurt                                     1/4 cup
  • Vanilla Essence                       1 tsp
  • Unsweetened Cocoa powder  6 tblsp


* For Hot coffee mix 1 tsp instant coffee powder in 1/4 cup hot water.

Method:
Preheat the oven for 180 degree Celsius for 10 minuites
Prepare the cake tin by dust with four or lined with the parchment paper.
Sieve the dry ingredients ie., Flour, cocoa powder, baking powder and baking soda for 3 or 4 times.

Mix oil and sugar well.Then add vanilla essence, milk and yogurt. Beat well till it becomes creamy.





Add the dry ingredients little by little and mix by using a spatula. Don't over mix because it will make the cake hard.

Lastly add the hot coffee and mix well.

Pour the cake mixture in to the prepared cake tin and bake for 35 to 40 minutes or check by inserting a toothpick into the cake and it should comes out clean.
keep the cake outside for 10 to 15 minute then invert on a wire rack till it cools.


After cooling can frost as per your wish.

Notes:
This cake will be of less sweet anf if you want you can add 2 or 3 tbls extra sugar.
Hot coffee will give excellent flavor to this cake, but if you don't like means can avoid.
Dont open in the first 25 minutes of the baking because it will make sudden decrease in heat and produce dent in the center of the cake.
After adding the dry ingredients don't over mix, just use a spatula to make them incorporate well.








Tuesday 26 July 2016

வெள்ளி பிள்ளையார் கொழுக்கட்டை (Velli Pillaiyaar Kozhukkattai)

தேவையான பொருட்கள்:
முதலில் பச்சை  அரிசியை கழுவி சுத்தம் செய்து சற்று நேரம் துணியில் உலர்த்திவிட வேண்டும். நன்கு உலர்ந்ததும் எடுத்து mixie யில் மாவாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தயார் செய்த அரிசி  மாவு   1 கப்
வெல்லம்                                       1/2 கப்
தண்ணீர்                                       1 கப்
தேங்காய் துருவல்                    1 கப்
பயத்தம் பருப்பு                         3 மேஜை கரண்டி
ஏலக்காய் பொடி                       1 /2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி வெல்லம் போட்டு கரைந்ததும் வடிகட்டி கொள்ள வேண்டும். பின்பு வடி கட்டிய வெல்ல நீரில் பயத்தம் பருப்பை போட்டு 5 நிமிடம் கொதித்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, போட்டு கலந்ததும்  மாவையும் கொட்டி கெட்டி ஆகும் வரை நன்கு கிளறி இறக்கவேண்டும்.
பின்பு சற்று சூடு ஆறியதும், கைகளில் கொஞ்சம் எண்ணெய்  தடவி கொண்டு கொழுக்கட்டைகளை செய்து இட்லி தட்டில் வைத்து ஆவியில்  வேகவைத்து எடுக்க வேண்டும்.

வெள்ளி பிள்ளையார் பூஜை செய்யும் முறையை கீழே உள்ள திரியில் காணலாம்.

Monday 25 July 2016

வெள்ளி பிள்ளையார் வழிபாடு(Velli Pillaiyaar Vazhipaadu)



இது ஆடி(அ)தை(அ)மாசி  மாதத்தில் தான் நினைத்த காரியம் / வேண்டுதல் நிறைவேற விநாயகரை வேண்டி செய்யப்படும் ஒரு பூஜை ஆகும்.
இதை செவ்வாய் பிள்ளையார் பூஜை முடித்த வாரத்தில் வரும் வெள்ளிக் கிழமை அதிகாலை நேரம் அல்லது மாலை சூரிய அஸ்தமனத்திற்கு  பிறகு செய்யும் பூஜை ஆகும்.

முன்னொரு காலத்தில் ஒரு கணவன் , மனைவி தாழங்காட்டில்  உள்ள விநாயகரை நினைத்து செய்த வேண்டுதல் நிறைவேறியதாக ஒரு கதை உண்டு. அதேபோல் இந்த விநாயகரை நினைத்து இந்த  பூஜையை செய்தால் நம் கோரிக்கையையும் இறைவன் நிறைவேற்றி வைப்பார் என்று நம்பிக்கை.
இதற்கும் செவ்வாய் பிள்ளையாரை போன்று ஒரு ரகசிய (??) கதை உண்டு. இதையும் பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் சொல்ல கூடாது என்பது ஐதீகம்.

பூஜை செய்யும் முறை:

இதுவும் பெண்கள் மட்டுமே செய்யும் ஒரு பூஜை. ஆண்களுக்கு அனுமதி இல்லை. அதோடு இப்பூஜையில்  செய்யப்படும் சிறப்பு கொழுக்கட்டைகளையும் பெண்கள் மட்டுமே உண்ண வேண்டும்.
முதல் நாளே வீட்டை துடைத்து சுத்தம் செய்து பூஜை அறையில் ஈர மாவுக் கோலம் இட  வேண்டும்.
பின்பு ஒரு  கொழுக்கட்டை மாவில் செய்த பிள்ளையார்( ஒரு சிறிய பலகை போல் செய்து அதன் மேல் இரண்டு உருண்டைகளை வைக்க வேண்டும்), கொழுக்கட்டை அகல் விளக்குகள்(கொழுக்கட்டை மாவில் வில்லுக்கு போல் செய்து ஆவியில் வேகவைத்து எடுத்தது) ,கொழுக்கட்டை மாவில் செய்த சிறிய கன்று குட்டி,கன்றின் தலை, உடல், கால்கள், ஒரு ஆண் மற்றும்  ஒரு பெண் உருவம் ஆகியவற்றை  கொழுக்கட்டை பொம்மைகளாக  செய்து வேகவைத்து நெய்வேதியமாக  வைக்க வேண்டும்.

ஒன்பது அகல் விளக்குகள் செய்வது சிறப்பு.
இந்த கொழுக்கட்டைகளை பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் மட்டுமே உன்ன வேண்டும். மீதம் உள்ள மாவில் சிறு உருண்டைகள் அல்லது பிடி கொழுக்கட்டைகள் செய்து வீட்டில் உள்ள ஆண்களுக்கு பூஜை முடிந்த பிறகு கொடுக்கலாம்.

இந்த கொழுக்கட்டை பிள்ளையாரை ஒரு வாழை இலையில் வைத்து  மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூ, அருகம்புல்  வைக்க வேண்டும். பின்பு வெற்றிலை, பாகு, பழம், பூ, எலுமிச்சை பழம், சிறிய வாழைக் குருத்து,செவ்விளநீர் (சிவப்பாக உள்ள முழு இளநீர்), தாழன்செடி ,தாலிக்கொடி(வெற்றிலை வடிவில் இருக்கும் இலைகளை கொண்ட ஒரு கொடி வகை ) ஆகியவற்றை அந்த வாழை  இலையில் வைக்க வேண்டும். பின்பு செய்து வைத்த கொழுக்கட்டை அகல் விளக்கை நெய் விட்டு  ஏற்றி வெள்ளி பிள்ளையார் கதையை மூன்று முறை கூற வேண்டும். இரண்டு மூன்று  பெண்கள் சேர்ந்து செய்யும் பொழுது வயதில்  மூத்தவராக இருப்பவர் இந்த கதையை கூறுவார்.
நாம் நெய்வேத்தியத்திர்க்காக செய்யும் கொழுக்கட்டை வடிவங்களுக்கான விளக்கங்கள் அந்த கதையில் கூறப்படும் .
சூடம், சாம்பிராணி காட்டி பூஜையை முடிக்க வேண்டும்.
பின்பு பூஜை செய்த இடத்தில் உள்ள பொருட்களை நீர் நிலைகளான ஆற்றில் அல்லது குலத்திலோ  கரைத்து விடலாம்.

வெள்ளி பிள்ளையார் கொழுக்கட்டை செய்முறையை  கீழே உள்ள திரியில் காணலாம்.
வெள்ளி பிள்ளையார் கொழுக்கட்டை

செவ்வாய் பிள்ளையார் வழிபாடு பற்றிய தகவல்களையும், பூஜை செய்யும் முறையும் கீழே உள்ள திரியில் கொடுத்துள்ளேன்.
செவ்வாய் பிள்ளையார் பூஜை

Sunday 24 July 2016

ஆடி மாதம் சிறப்புகள்-Specialties of Aadi month

தமிழ் மாதங்களில் வரும் நான்காம் மாதமே ஆடி.
சூரிய பககாவனின் கதிர் நகர்வின் திசையை வைத்து ஆண்டினை  இரண்டாக பிரிப்பர். 
  • தட்சிணாயனம்  
இது சூரியன் வட திசையில் இருந்து தென்  திசை நோக்கி நகர்வது.
  • உத்திராயணம்
இது சூரியன் தேன் திசையில் இருந்து வாடா திசை நோக்கி நகர்வது.

இந்த தட்சிணாயணம் ஆடிமாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரையிலும், உத்திராயணம் தை மாதத்தில் தொடங்கி ஆனி மாதம் வரையிலும் நடக்கும்.

இந்த ஆடி மாதம் சக்தி மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மனை வழிபட   ஏற்ற மாதம்.
இதற்கு  அறிவியல் ரீதியான காரணத்தையும் எங்கோ படித்த நினைவு இருகின்றது.
இந்த ஆடி மாதம் கால மாற்றத்தின் துவக்கம் ஆகும். கோடை காலத்தில் இருந்து மழை காலம் துவங்கும் நேரம். இந்த திடீர் மாற்றத்தால்  நோய்கள் தாக்க கூடிய வாய்புகள் மிக அதிகம்.
எனவே கிருமி நாசிநிகலான மஞ்சள் வேப்பிலை போன்றவற்றின் பயன்பாட்டினால் இந்த நோய்களின் தாக்கம்  குறையும். எனவே தான் இந்த மாதத்தில்அ ம்மன் விழாக்களை அதிகமாக உருவாக்கி உள்ளனர் நம் முன்னோர்கள்.
இந்த ஆடி மாதத்தில் சிறப்பாக கருதப்படும் நாட்கள்.

  • ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்
இம்மாதத்தில் வரும் வெள்ளி செவ்வாய் கிழமைகள் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது.இந்நாளில் அம்மனை வழிபட்டால் மால்கைய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளி கிழமைகளில் திருவிளக்கு பூஜை செய்வதும் மிக சிறப்பு.
ஆடி மாதம் வரும் பதினெட்டாம் நாளே  ஆடிபெருக்கு நாளாகும். இப்படிகையை பற்றிய மேலும் விடயங்கள்  கீழே உள்ள திரியில் உள்ளது.
           ஆடி பதினெட்டு(அ)ஆடி பெருக்கு 
  • ஆடி அமாவாசை
ஆடி மாதம் வரும் அமாவாசை நாளில் கடலில் குளிப்பதும்,  பித்ருக்களுக்கு தர்ப்பணம் தருவதும்  சிறப்பு.
  • ஆடி பௌர்ணமி
இந்நாளிலேயே ஹயக்ரீவர் அவதாரம் செய்த நாளாக கூறுவார். எனவே அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
  • ஆடி கிருத்திகை
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை  முருகபெருமானுக்கு மிக உகந்த நாளாக கொடாடபடுகிறது. எனவே அனைத்து முறைகள் கோவில்களிலும் சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடைபெறும்.
இது பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக விநாயகரையும், அவ்வையாரையும் நினைத்து ஆடி மாத  செவ்வாய் கிழமைகளில்  செய்யும் ஒரு பூஜை ஆகும். இதை பற்றிய மேலும் விபரங்கள் கீழே உள்ள திரியில் உள்ளது.
  • ஆடி பூரம்
ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த திருநாளாகும்.

இந்த ஆடி மாதத்தில் தான் ஆற்றில் புது நீர் பெருக்கெடுக்கும் காலம் ஆகையால் இந்த மாதத்தில் புதிதாக விதை விடுவார்கள்.

ஆடி பெருக்கு(அ) ஆடி பதினெட்டு(Aadi perukku/Aadi pathinettu)


வருடத்தின் நான்காம் மாதமான ஆடி மாதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு. ஆடி மாதத்தில் வரும் பதினெட்டாம் நாளையே ஆடி பெருக்காக கொண்டாடுகின்றோம்
ஆடி மாதத்தின்  சிறப்புகளை இங்கு காணலாம்.


தமிழகத்தில்  முக்கியமாக தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு அடிப்படையான   நீருக்கு  ஆதாரம் காவிரி நதியே.
இந்த காவிரி நதிக்கு சிறப்பாக கொண்டாடப்படும் விழாவே இந்த ஆடி பதினெட்டு. நாகை மாவட்டம் பூம்புகாரிலிந்த காவிரி ஆறு கடலுடன் கலக்கிறது, இங்கே காவிரிக்கென்று தனி கோவிலும் உண்டு.

இந்த ஆடி மாதத்தில் தான் காவிரியின் பிறப்பிடமான குடகு மலை பகுதியில் பருவமழை பொழியும் நேரம், எனவே அந்த நீர்தமிழகத்தில்  காவிரியின்  புது நீராக  பெருக்கெடுத்து ஓடும். விவசாயிகள் இந்த நீரைக்  கொண்டே அந்த வருட சாகுபடிக்கான விதைகளை இடுவர்.

நமக்கு உணவு தரும் விவசாயத்திற்கு பயன்படும் அனைத்தையுமே தெய்வமாக வணங்கி விழா எடுத்து நன்றி தெரிவித்து  சிறப்பு செய்வது நம் தமிழர்களின் பழக்கம். சூரியனுக்கு பொங்கல், உழவனுக்கு உறுதுணையாக நிற்கும் மாட்டிற்கு மாட்டு பொங்கல், போன்று நீரிற்கு இந்த பதினெட்டாம் பெருக்கு.
இந்த நாளில் தான் அந்த வருடத்தில் திருமணமான புதுமண தம்பதிகள் தங்கள் முஹுர்த்த மாலைகளை நீரில் விடுவது வழக்கம்.

இது நம் முன்னோர்களால் மிக சிறப்பாக கொண்டாட பட்ட விழாக்களில் ஒன்று. இதை கல்கியின் பொன்னியின் செல்வனின் முதல் அத்தியாயத்திலேயே காணலாம்.
சோழ நாட்டில் இவ்விழாவை மக்கள் கொண்டாடி மகிழ்ந்த காட்சிகளை நம் மனக்கண்களுக்கு படம் போன்று அழகாக விவரித்திருப்பார்.

பொன்னியின் செல்வனில் இருந்து சில வரிகள்:

"ஆடி பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இரு கரையை தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம் அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெரும் ஏரிகள் பூரணமாக நிரம்பி கரையின் உச்சியை தொட்டு கொண்டு அலைமோதி கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாக தண்ணீர் வந்து வீர நாராயணன் ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கு கடலாக மாற்றியிருந்தது.அந்த ஏரியின் எழுபத்தி ஏழு கணவாய் வழியாகவும் தண்ணீர் குபுகுபுவென்று பாய்ந்து பக்கத்தில் நேடுதூரதுக்கு நீர்வளத்தை அளித்துக்கொண்டு இருந்தது.
அந்த ஏரி தண்ணீரை கொண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் கழனிகளில் உழவும், விரை தெளியும் , நடவும் நடந்து கொண்டு இருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுகொண்டிருந்த குடியான பெண்களும் இனிய இசைகளில் அங்கங்கே பாடி கொண்டிருந்தார்கள்.
            "வடவாறு பொங்கி வருகுது     
               வந்து பாருங்கள் பள்ளியரே! 
                   வெள்ளாறு விரைந்து வருகுது 
                       வேடிக்கை பாருங்கள் தோழியரே !!
                           காவேரி புரண்டு வருகிறது காண 
                               வாருங்கள் பாங்கியரே !!! "

கொண்டாடபடும் முறை:

இதை காவிரி நதி அல்லது அதன் கிளை நதிகளுக்கோ அல்லது நீர் தேக்கங்களுக்கோ  சென்று படைப்பது வழக்கம். எங்கள் ஊரில் இருந்து மணிகர்ணிகை என்ற கிளை நதி பக்கம் என்பதால் அங்கு சென்று படையல் செய்வோம்.

 சிறுவர்கள் அழகாக வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப் பட்ட தேர் போன்ற அமைப்புடைய சப்பர தட்டியை இழுத்து வருவர்.
சிலர் நொனாக்காய் மற்றும் தென்னை ஓலை குச்சிகளை வைத்து செய்யப்பட்ட சிறிய தேரை இழுத்து வருவதும் உண்டு.
பெண்கள் வீட்டிலிருந்தே பல கலவை சாதங்களை(சக்கரை பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் போன்றவை) நெய்வேத்தியமாக  கொண்டு வருவர்.
எள்ளு உருண்டை, மாவிளக்கு ஆகியவற்றையும் நெய்வேத்தியங்களாக படைப்பது வழக்கம்.

முதலில்ஆற்றின் கரை யோரத்தை சுத்தம் செய்து அங்கு நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும்.பின்பு ஆற்றின் அடியில்  இருந்து மண் எடுத்து எத்தனை சுமங்கலிகள் உள்ளனரோ அத்தனை  உருண்டைகளாய்  பிடித்து வைத்து அதற்கு  மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூக்களை வைக்க வேண்டும். இதையே  காவிரி அம்மனாக நினைத்து அதற்க்கு காதோலை கருகமணி(ரோஜா வர்ணம் அடித்த பனை ஒலை   சுருளில் சிறிய கருப்பு வளையல் கோர்க்க பாட்டிற்கும்), மஞ்சள் தடவிய நூல், போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.
பின்பு விளக்கை ஏற்றி வைத்து விட்டு அம்மனுக்கு முன்பு ஒரு தலை வாழை இலையில் வெற்றிலை பாக்கு , பழம்(பேரிக்காய் கட்டாயம் இருக்கும்), பூ, மஞ்சள் , குங்குமம், தேங்காய், போன்றவற்றை வைக்க வேண்டும்.பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைப்பர்.
(வீட்டிலேயே படைப்பவர்கள் மண்ணில் செய்வதற்கு பதில் மஞ்சளில் அம்மனை செய்து வழிபடலாம்.)

பின்பு வீட்டில் இருந்து தயார் செய்யப்பட்டு எடுத்து வந்த எள் உருண்டை , மாவிளக்கு,கலவை  சாதங்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். இதோடு சிறிது பச்சரிசியுடன் பயத்தம் பருப்பு(பாசி பருப்பு) சேர்த்து ஆற்று நீரில் கழுவி அதில் வெல்லம் கலந்து நிவேதியமாக படைக்க வேண்டும்.
படைக்கும் முன்பு, சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் வேறு நகையை அணிந்து கொண்டு  தங்கள் தாலியை காவிரி அம்மனுக்கு போட்டு படைத்த பின்பு அதை தங்கள் கணவன்மார்களின் கையினால் அணிந்து கொள்வார்கள்.
படைத்து முடித்ததும் அம்மன் மேல் இருந்த மஞ்சள் நூலினை எடுத்து ஆண்கள் கைகளிலும் ,பெண்கள் கழுத்திலும் அணிந்து கொளவார்கள்.
பின்பு அந்த அம்மனாக நினைத்து வழிபட்ட மண் உருண்டைளை ஆற்று நீரில் கரைத்து இந்த வருடமும் தங்களுக்கு  உறுதுணையாக இருந்து விவசாயம் வளம் பெற உதாவுமாறு  வேண்டிக்கொள்வார்கள்.

தற்போதைய நிலையில் ஆற்றில் தண்ணீர் வராததாலும், ஆற்றங்கரைக்கு சென்று படைக்கமுடியாததாலும்  வீட்டிலேயே மோட்டாருக்கும் கிணற்றுக்கும்  படைத்து  விட்டாலும்  உறவினர் நண்பர்களோடு குடும்பமாக சப்பரம் இழுத்து சென்று நுரை ததும்ப பெருக்கெடுத்து ஓடும் ஆற்றிற்கு படைத்து  வந்த நினைவுகள்  நிஜமாகவே  ஒரு அழகிய கனா காலமாகவே மனதில் பதிந்து உள்ளது.