Friday 1 July 2016

குடை மிளகாய் பொரியல்(Capsicum Poriyal)


 தேவையான பொருட்கள்
குடை மிளகாய்                           1(பெரியது)
வெங்காயம்                                 1
தக்காளி                                         1
எண்ணெய்                                   தேவையான அளவு
கடுகு                                                1/4 தேக்கரண்டி
சீரகம்                                               1/ 4 தேக்கரண்டி
பச்சை பட்டாணி  (frozen )                     1/4 கப்
ஸ்வீட் கார்ன் (sweet corn)            1/4 கப் (optional )
மிளகாய் தூள்                                1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி                  1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்                        1/2 தேக்கரண்டி
இஞ்சி  விழுது                                 1/4 தேக்கரண்டி
உப்பு                                                  தேவையான அளவு
தண்ணீர்                                          தேவையான அளவு
கொத்தமல்லி தழை                    சிறிதளவு

செய்முறை :
முதலில்  குடை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக்கவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்  விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரம் வதங்கும்.
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்தவுடன் பொடி வகைகளை சேர்த்து வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள குடை மிளகாய் , பட்டாணி, கார்ன் சேர்த்து வதக்கவும்.  தேவைக்கேற்ப உப்பை சேர்த்து வதக்கியவுடன் சிறிது  தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும். காய் நன்கு வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி  இறக்கவும்.

குறிப்பு : மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் க்கு பதிலாக சாம்பார் பொடி யையும் சேர்க்கலாம்.
frozen peas க்கு பதிலாக காய்ந்த பட்டாணியையும் வேக வைத்து சேர்க்கலாம்.

இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். சிறிது நீர் அதிகம் விட்டு gravy போல் செய்து சப்பாத்தி , ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


வேப்பம்பூ மாங்காய் பச்சடி(veppamboo mango pachadi)

இது தமிழ் வருட பிறப்பின் பொழுது செய்ய வேண்டிய முக்கிய நெய்வேத்தியம் ஆகும்.
இதில் அறுசுவைகளும் கலந்து இருக்கும்.


தேவையான பொருட்கள்:

மாங்காய்(துருவியது)         1 கப்
வேப்பம்பூ                           சிறிதளவு
வெல்லம்                             1/4 கப்
தேங்காய் துருவல்               1/2 கப்
உப்பு                                   தேவையான அளவு
கடுகு                                  1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு                  1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்               1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்                 1 அல்லது 2
எண்ணெய்                          தாளிக்க 
கறிவேப்பிலை                     1 கொத்து 


செய்முறை :

முதலில் மாங்காயை தோல் நீக்கி பொடியாக செதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் கரண்டி அல்லது மத்தால் நன்றாக மசித்துக்கொள்ளவும்.
பின்பு உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து ஒன்றாக சேர்ந்து  வரும் அளவு கொதிக்க விடவும்.
பின்பு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின்பு சிறிது எண்ணையில் கடுகு, சிவப்பு மிளகாய், உளுத்தம்பருப்பு பெருங்காய தூள் , வேப்பம்பூ, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சடியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

குறிப்பு: மாங்காய் வேக வைக்கும் பொழுது நீரை மாங்காய் மூழ்கும்  அளவு சேர்த்தால் போதுமானது, அதிகம்  சேர்த்தால் பச்சடி மிகவும் தளர்வாகிவிடும்.
வேப்பம்பூவை சிறிது நெய் அல்லது எண்ணெயில் தனியாக வதக்கியும்  சேர்க்கலாம்.